பதிவு செய்த நாள்
14 நவ2020
07:25
புதுடில்லி:‘இண்டிகோ பெயின்ட்ஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 1,000 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இந்நிறுவனம், பெயின்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு, தமிழகம், கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், தொழிற்சாலைகள் உள்ளன.
இதில், தமிழகத்தில் புதுக்கோட்டையில் உள்ள தொழிற்சாலையை விரிவுபடுத்த, இண்டிகோ பெயின்ட்ஸ் திட்டமிட்டு உள்ளது. இதற்காகவும், ‘டின்டிங்’ இயந்திரங்கள் வாங்கவும், பழைய கடன்களை திரும்பத் தரவும், பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது.இதையொட்டி, பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ பெயின்ட்ஸ் நிறுவனத்தில், ‘சீக்கியோ கேப்பிடல்’ குழுமம், அதன் இரு துணை நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனங்களின், 5.80 லட்சம் பங்குகள் ஏல முறையிலும்; 300 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும் வெளியிடப்பட உள்ளன. பங்கு வெளியீட்டு நிர்வாகத்தை, ‘கோடக் மகிந்திரா கேப்பிடல், எடல்வைஸ் பைனான்சியல், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ்’ ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|