பதிவு செய்த நாள்
17 நவ2020
20:58
மும்பை:ரிசர்வ் வங்கியின், புதுமை மையத்தின் முதல் தலைவராக, இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், புதுமை மையத்தை அமைக்க இருப்பதாக அறிவித்தது.தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தி, நிதித் துறையில் புதுமைகளை ஏற்படுத்துவதற்காக, இந்த புதுமை மையத்தை அமைக்க இருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்தது.இந்நிலையில், இந்த ரிசர்வ் வங்கி புதுமை மையத்தின் முதல் தலைவராக கிரிஸ் கோபாலா கிருஷ்ணனை நியமித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிஸ் கோபால கிருஷ்ணன், இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராவார். மேலும், இந்நிறுவனத்தில் இணை தலைவராகவும் பதவி வகித்தவர்.கிரிஸ் கோபாலகிருஷ்ணன், தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வளர்ப்பகமான, ‘ஸ்டார்ட் அப் வில்லேஜ்’ எனும் மையத்தின் தலைமை வழிகாட்டியாக இருக்கிறார்.
ரிசர்வ் வங்கி புதுமை மையம், தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும். உறுப்பினர் குழுவில், மெட்ராஸ் ஐ.ஐ.டி., பேராசிரியர் அஷோக் ஜுன்ஜுன்வாலா, டி.வி.எஸ்., கேப்பிட்டல் பண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கோபால் ஸ்ரீனிவாசன் இடம் பெற்றுள்ளனர்.சிண்டிகேட் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா, ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனர் டி.ரபி ஷங்கர் ஆகியோரும் உள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|