இந்தியா மிளிரத்தொடங்கி விட்டதா?இந்தியா மிளிரத்தொடங்கி விட்டதா? ...  வியத்தகு மாற்றத்தை காண்கிறேன் பாராட்டும் ஆனந்த் மகிந்திரா வியத்தகு மாற்றத்தை காண்கிறேன் பாராட்டும் ஆனந்த் மகிந்திரா ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரிசர்வ் வங்கி புதுமை மையத்தின் முதல் தலைவரானார் கிரிஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2020
20:58

மும்பை:ரிசர்வ் வங்கியின், புதுமை மையத்தின் முதல் தலைவராக, இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், புதுமை மையத்தை அமைக்க இருப்பதாக அறிவித்தது.தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தி, நிதித் துறையில் புதுமைகளை ஏற்படுத்துவதற்காக, இந்த புதுமை மையத்தை அமைக்க இருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்தது.இந்நிலையில், இந்த ரிசர்வ் வங்கி புதுமை மையத்தின் முதல் தலைவராக கிரிஸ் கோபாலா கிருஷ்ணனை நியமித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிஸ் கோபால கிருஷ்ணன், இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராவார். மேலும், இந்நிறுவனத்தில் இணை தலைவராகவும் பதவி வகித்தவர்.கிரிஸ் கோபாலகிருஷ்ணன், தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வளர்ப்பகமான, ‘ஸ்டார்ட் அப் வில்லேஜ்’ எனும் மையத்தின் தலைமை வழிகாட்டியாக இருக்கிறார்.

ரிசர்வ் வங்கி புதுமை மையம், தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும். உறுப்பினர் குழுவில், மெட்ராஸ் ஐ.ஐ.டி., பேராசிரியர் அஷோக் ஜுன்ஜுன்வாலா, டி.வி.எஸ்., கேப்பிட்டல் பண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கோபால் ஸ்ரீனிவாசன் இடம் பெற்றுள்ளனர்.சிண்டிகேட் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா, ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனர் டி.ரபி ஷங்கர் ஆகியோரும் உள்ளனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)