வியத்தகு மாற்றத்தை காண்கிறேன் பாராட்டும் ஆனந்த் மகிந்திரா வியத்தகு மாற்றத்தை காண்கிறேன் பாராட்டும் ஆனந்த் மகிந்திரா ...  புதிய தொழில் பூங்காக்கள் வேகம் காட்டும் சிப்காட் புதிய தொழில் பூங்காக்கள் வேகம் காட்டும் சிப்காட் ...
புத்தாண்டில் உயர்கிறது போன் கட்டணம் தொலைதொடர்பு நிறுவனங்கள் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2020
21:04

புதுடில்லி:புத்தாண்டிலிருந்து, தொலைதொடர்பு நிறுவனங்கள், தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்டவற்றுக்கான கட்டணத்தை, 15- – -20 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.

கடுமையான நிதி நெருக்கடிகள் காரணமாக, நிறுவனங்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.இதை உறுதி செய்வது போல், வோடபோன் ஐடியா நிறுவனம், பிற நிறுவனங்களுக்கு முன்னதாக, இந்த ஆண்டு இறுதியிலோ, அல்லது, புத்தாண்டு துவக்கத்திலோ கட்டணத்தை அதிகரிக்கும் என தகவல்கள் கசிந்ததை அடுத்து, சந்தையில் நேற்று இந்நிறுவன பங்குகள் விலை அதிகரித்தது.

வோடபோன் ஐடியாவை தொடர்ந்து, பார்தி ஏர்டெல் நிறுவனமும் கட்டண உயர்வை அதிகரிக்கும் என தெரிகிறது.ஆனாலும், இந்த இரண்டு நிறுவனங்களும், ரிலையன்ஸ் ஜியோ கட்டண விஷயத்தில் எத்தகைய முடிவை எடுக்கும் என்பதை அறிய காத்திருக்கின்றன.

இது குறித்து, இத்துறையை சார்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நிதி நெருக்கடிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் சரிவு உள்ளிட்ட காரணங்களால், கட்டணத்தை உயர்த்தாமல் சமாளிப்பது கடினம் என்ற முடிவுக்கு சில நிறுவனங்கள் வந்துள்ளன.குறிப்பாக, வோடபோன் ஐடியா, இரண்டாவது காலாண்டு அறிவிப்பின்போதே, கட்டண உயர்வு குறித்த சிக்னல்களை வெளியிட்டது.பார்தி ஏர்டெல் நிறுவனமும் கட்டண அதிகரிப்புக்கு ஆதரவாகவே இருக்கிறது.


ஆனால், கட்டண உயர்வை முதலில் அறிவிக்க அது தயங்குகிறது.வோடபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களும், இப்போதைய கட்டண விகிதங்கள் தாக்குப்பிடிக்கும் வகையில் இல்லை என கருதுகின்றன.இதற்கிடையே, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான, கட்டண விகிதத்தை நிர்ணயிக்கும் முயற்சியில் அரசு உள்ளது. அரசு, கட்டணத்தில் கட்டுப்பாடுகளை விதித்தாலும் கூட, நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவிக்கவே செய்யும் என்றுதான் தோன்றுகிறது.

இதற்கு முன்னதாக, தொலைதொடர்பு நிறுவனங்கள், கடந்த ஆண்டு டிசம்பரில் கட்டண உயர்வை அறிவித்தன. இப்போது, மீண்டும் அத்தகைய முயற்சியில் இறங்கி இருக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.பங்கு விலை அதிகரிப்புவோடபோன் ஐடியா நிறுவனம், கட்டணத்தை அதிகரிக்க கூடும் என செய்திகள் பரவிய நிலையில், இந்நிறுவன பங்குகள் விலை, நேற்றைய வர்த்தகத்தின் போது, கிட்டத்தட்ட 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது.


மும்பை பங்குச் சந்தையில், நேற்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில், வோடபோன் ஐடியா நிறுவன பங்குகள் விலை, 9.98 சதவீதம் அதிகரித்து, 10.02 ரூபாயாக உயர்ந்தது. இருப்பினும், வர்த்தகத்தின் முடிவில், 1.10 சதவீதம் அதிகரித்து. 9.20 ரூபாயில் நிலைபெற்றது.பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் விலையும், துவக்கத்தில், 494.95 ரூபாயை தொட்டு, வர்த்தகத்தின் இறுதியில், 484.50 ரூபாயில் நிலைபெற்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)