பதிவு செய்த நாள்
17 நவ2020
21:07
புதுடில்லி:‘ஆண்டனி வேஸ்ட் ஹேண்டிலிங் செல்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி அனுமதி வழங்கி உள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின்போது, 98.5 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிடுகிறது. மேலும், நிறுவனர்கள் வசம் இருக்கும், 99.27லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, கடந்த செப்டம்பரில் செபிக்கு விண்ணப்பித்திருந்தது.
இதனை பரிசீலித்து, கடந்த, 13ம் தேதியன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திடக் கழிவு மேலாண்மை சேவை வணிகத்தில், நாட்டின் முன்னணி நிறுவனமாக, ஆண்டனி வேஸ்ட் ஹேண்டிலிங் செல் உள்ளது.புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, கடனை அடைப்பது, பொதுவான நிர்வாக தேவைகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|