பதிவு செய்த நாள்
18 நவ2020
21:23
சென்னை:சமையல் காஸ் சிலிண்டருக்கான பணத்தை, ‘டிஜிட்டல்’ முறையில் செலுத்துவது அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஐ.ஒ.சி., எனப்படும், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, 1.36 கோடி, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு, ஏஜன்சி ஊழியர்கள் வாயிலாக, சிலிண்டர் டெலிவரி செய்யப்படுகிறது.
காஸ் முன்பதிவு செய்வதற்கும், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கும், இந்தியன் ஆயில், கூடுதல் வசதிகளை துவக்கியுள்ளது. இதனால், அந்நிறுவனத்தின் வாடிக்கை யாளர்கள், டிஜிட்டல் முறை யில் பணம் செலுத்துவது அதிகரித்து வருகிறது.இது குறித்து, இந்தியன் ஆயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில், 12 சதவீதம் பேர், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி உள்ளனர்.நிறுவனத்தின் டிஜிட்டல் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது டிஜிட்டல் வழியிலான பரிவர்த்தனை, 17.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|