ஆன்லைனில் சிலிண்டர் ஆர்டர்கள் அதிகரிப்பு ஆன்லைனில் சிலிண்டர் ஆர்டர்கள் அதிகரிப்பு ...  ‘பாரத் பெட்ரோலியம்’ பங்குகள் வாங்குவதில் ‘வேதாந்தா’ ஆர்வம் ‘பாரத் பெட்ரோலியம்’ பங்குகள் வாங்குவதில் ‘வேதாந்தா’ ஆர்வம் ...
சிமென்ட் விலை அதிகரிப்பு கட்டுமான துறையினர் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2020
21:25

சென்னை:சிமென்ட் விலை, திடீரென மூட்டைக்கு, 30 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால், கட்டுமான துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஊரடங்கு காலத்தில், கட்டுமான பணிகள் முற்றிலுமாக முடங்கின. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கும் நிலையில், சிமென்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த சிமென்ட் நிறுவனங்கள், 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை விலையில், 60 முதல், 100 ரூபாய் வரை உயர்த்தினர்.

ஜூன் மாதம் ஏற்பட்ட இந்த விலை உயர்வால்,கட்டுமான பணிகள் துவங்குவது தாமதமானது. பண்டிகை காலம் முடிந்த நிலையில், கட்டுமான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள இத்துறையினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், தற்போது மீண்டும் சிமென்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.ராமபிரபு கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த சிமென்ட் நிறுவனங்கள், எவ்வித அடிப்படை காரணமும் இன்றி விலையை உயர்த்தி வருகின்றன. மூட்டைக்கு, 60 ரூபாய் உயர்த்தப்பட்ட சில மாதங்களில், மீண்டும் மூட்டைக்கு, 30 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் கட்டுமான நிறுவனங்களும், வீடு கட்ட நினைக்கும் பொது மக்களும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.


விலை உயர்வால், 410 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை சிமென்ட், தற்போது, 440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இது குறித்து தமிழக அரசும், மத்திய அரசும் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)