பதிவு செய்த நாள்
18 நவ2020
21:27
புதுடில்லி:மத்திய அரசின் வசம் இருக்கும், ‘பாரத் பெட்ரோலியம்’ நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதில் விருப்பமிருப்பதாக, ‘வேதாந்தா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பி.பி.சி.எல்., எனும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிறுவனத்தின், 52.98 சதவீத பங்குகள், மத்திய அரசின் வசம் உள்ளன. அரசின் பங்குகளை வாங்குதில் ஆர்வம் காட்டும் நிறுவனங்கள், அது குறித்து தங்களுடைய முதற்கட்ட விருப்பத்தை தெரிவிக்கலாம் என்றும், அதற்கு நவ., 16ம் தேதி கடைசி தேதி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இப்பங்குகளை வாங்குவதில் தன் விருப்பத்தை தெரியப்படுத்தி உள்ளது, வேதாந்தா நிறுவனம். ஏற்கனவே எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகத்தில் ஈடுபட்டு வரும் காரணத்தால், அதனுடன் தொடர்புடைய எரிபொருள் சில்லரை விற்பனை வணிகத்தில் ஈடுபட்டு வரும், பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை வாங்குவதில், வேதாந்தா ஆர்வம் காட்டுகிறது.
எரிபொருள் சில்லரை விற்பனையில், இரண்டாவது இடத்தில் இருக்கும், பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை வாங்குவதற்கு, பலர் முன்வரக்கூடும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், ரிலையன்ஸ், சவுதி அராம்கோ, டோட்டல், பி.பி., உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்கள், எதுவும் வாங்க முன்வரவில்லை. இந்நிலையில், தற்போது வேதாந்தா நிறுவனம் பங்குகளை வாங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|