சிமென்ட் விலை அதிகரிப்பு கட்டுமான துறையினர் அதிர்ச்சி சிமென்ட் விலை அதிகரிப்பு கட்டுமான துறையினர் அதிர்ச்சி ... டேட்டா சென்டர் துறை முதலீடுகள் அதிகரிப்பு டேட்டா சென்டர் துறை முதலீடுகள் அதிகரிப்பு ...
‘பாரத் பெட்ரோலியம்’ பங்குகள் வாங்குவதில் ‘வேதாந்தா’ ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2020
21:27

புதுடில்லி:மத்திய அரசின் வசம் இருக்கும், ‘பாரத் பெட்ரோலியம்’ நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதில் விருப்பமிருப்பதாக, ‘வேதாந்தா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பி.பி.சி.எல்., எனும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிறுவனத்தின், 52.98 சதவீத பங்குகள், மத்திய அரசின் வசம் உள்ளன. அரசின் பங்குகளை வாங்குதில் ஆர்வம் காட்டும் நிறுவனங்கள், அது குறித்து தங்களுடைய முதற்கட்ட விருப்பத்தை தெரிவிக்கலாம் என்றும், அதற்கு நவ., 16ம் தேதி கடைசி தேதி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்பங்குகளை வாங்குவதில் தன் விருப்பத்தை தெரியப்படுத்தி உள்ளது, வேதாந்தா நிறுவனம். ஏற்கனவே எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகத்தில் ஈடுபட்டு வரும் காரணத்தால், அதனுடன் தொடர்புடைய எரிபொருள் சில்லரை விற்பனை வணிகத்தில் ஈடுபட்டு வரும், பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை வாங்குவதில், வேதாந்தா ஆர்வம் காட்டுகிறது.

எரிபொருள் சில்லரை விற்பனையில், இரண்டாவது இடத்தில் இருக்கும், பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை வாங்குவதற்கு, பலர் முன்வரக்கூடும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், ரிலையன்ஸ், சவுதி அராம்கோ, டோட்டல், பி.பி., உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்கள், எதுவும் வாங்க முன்வரவில்லை. இந்நிலையில், தற்போது வேதாந்தா நிறுவனம் பங்குகளை வாங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)