பதிவு செய்த நாள்
18 நவ2020
21:29
மும்பை:மும்பை பங்குச் சந்தை குறியீடான, ‘சென்செக்ஸ்’ நேற்று முதன் முறையாக, 44 ஆயிரம் புள்ளிகளை தாண்டி, சாதனை படைத்துஉள்ளது.
தொடர்ச்சியான அன்னிய முதலீடுகள் வருகை, ஆசிய சந்தைகளின் சாதகமான போக்கு, நிதி நிறுவன பங்குகள் விலை அதிகரிப்பு போன்றவை காரணமாக, நேற்று சந்தை உயர்வைக் கண்டது.நேற்று, வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ், 44215.49 புள்ளிகளை தொட்டது. பின், வர்த்தகத்தின் நிறைவில், 227.34 புள்ளிகள் அதிகரித்து, 44180.05 புள்ளிகளில் நிலைபெற்றது.
இதைப் போலவே, தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி, 64.05 புள்ளிகள் அதிகரித்து, இதுவரை இல்லாத சாதனையாக, 12938.85 புள்ளிகளை எட்டி நிலைபெற்றது.நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், ‘மகிந்திரா அண்டு மகிந்திரா’ நிறுவனம் அதிகபட்ச உயர்வை கண்டது.இந்நிறுவன பங்குகள் விலை, 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது.
இதையடுத்து, ‘எல்., அண்டு டி., இண்டஸ்இண்ட் பேங்க், பஜாஜ் பின்சர்வ், எஸ்.பி.ஐ., பஜாஜ் பைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், கோட்டக் பேங்க்’ ஆகியவையும் விலை உயர்வை சந்தித்தன.இதற்கு மாறாக, ‘எச்.யு.எல்., ஐ.டி.சி., டைட்டன், டி.சி.எஸ்., பார்தி ஏர்டெல்’ ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவைக் கண்டன.அடுத்த ஆண்டு டிசம்பரில், சென்செக்ஸ், 50 ஆயிரம் புள்ளிகளை தொடும் என, ‘மார்கன் ஸ்டான்லி’ தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|