பதிவு செய்த நாள்
18 நவ2020
21:31
மும்பை:லட்சுமி விலாஸ் வங்கியை, பி.சி.ஏ., எனும், உடனடி திருத்த நடவடிக்கையின் கீழ், ரிசர்வ் வங்கி கொண்டு வந்து, நிர்வாகத்தை கையில் எடுத்ததை அடுத்து, இவ்வங்கியின் பங்குகள் விலை நேற்று, 20 சதவீதம் அளவுக்கு சரிந்து, அதன், அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச வர்த்தக வரம்பை எட்டியது.
மும்பை பங்குச் சந்தையில், இவ்வங்கியின் பங்கு விலை, 20 சதவீதம் சரிந்து, 12.40 ரூபாய் என்ற அளவில், அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச வர்த்தக வரம்பை எட்டியது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையில், 19.94 சதவீதம் சரிந்து, 12.45 ரூபாயாக குறைந்தது.இதற்கிடையே, லட்சுமிவிலாஸ் வங்கியை, டி.ஏ.பி.எஸ்., வங்கியுடன் இணைக்கும்பட்சத்தில், இவ்வங்கி பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு எதுவும் கிடைக்காது என்கின்றனர் நிபுணர்கள்.
வங்கியின் நிகர மதிப்பு சுத்தமாக கரைந்துபோன நிலையில், இணைப்புக்கான வரைவு திட்டத்தின் அடிப்படையில், பங்குதாரர்களுக்கு எதுவும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர்.கடந்த, 2017ம் ஆண்டு ஜூனில், 187 ரூபாயாக இருந்த இவ்வங்கி பங்கின் விலை நேற்று, 12.45 ரூபாய்க்கு வந்துவிட்டது.நிறுவனர்கள் வசம் வெறும், 6.8 சதவீத பங்குகளே உள்ளன. எல்.ஐ.சி., வசம், 1.6 சதவீதமும்; ஆதித்ய பிர்லா சன் லைப் இன்ஷூரன்ஸ் வசம், 1.83 சதவீதமும்; பிரமெரிக்கா லைப் இன்ஷூரன்ஸ் வசம், 2.73 சதவீத பங்குகளும் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|