பதிவு செய்த நாள்
21 நவ2020
21:54
காந்தி நகர்:பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கை, தேசத்தை ஊக்கப்படுத்தியுள்ளது என்றும், அரசின் தைரியமான சீர்திருத்தங்கள், முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்றும், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
முன்னேற்றம்
பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, காணொலி மூலம் பேசிய அவர், மேலும் கூறியதாவது:அரசு மேற்கொண்ட தைரியமான சீர்திருத்தங்கள் விரைவான மீட்புக்கும், அடுத்து வரும் ஆண்டுகளில் விரைவான முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில், இந்தியா ஒரு முக்கியமான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த சமயத்தில், நம் பாதுகாப்பை நாம் குறைக்க முடியாது.
இந்தியா ஒரு புராதன நாடு. இது, கடந்த காலங்களில் பல இடர்ப்பாடுகளை எதிர்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும், மிகவும் வலுவாக மீண்டும் எழுந்து உள்ளது.
வாய்ப்பு
எதையும் எதிர்கொண்டு மீள்வது என்பது, இந்திய மக்கள் மற்றும் கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.பொருளாதார வளர்ச்சி, இதற்கு முன் கண்டிராத வாய்ப்புகளை
உருவாக்கும். அடுத்த, 20 ஆண்டுகளில், உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும்.பொருளாதார வல்லரசாக மாறும் அதேசமயத்தில், துாய்மை மற்றும் பசுமை ஆற்றல் வல்லரசாகவும் மாறுவது என, ஒரே நேரத்தில், இரட்டைஇலக்குகளை அடைய இந்தியா முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|