பதிவு செய்த நாள்
21 நவ2020
21:59
மும்பை:லட்சுமி விலாஸ் வங்கியை, டி.பி.எஸ்., இந்தியாவுடன் இணைப்பதற்கான வரைவு திட்டத்தை, ரிசர்வ் வங்கி இறுதி செய்து, வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்கும் என
தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்று அறிவிக்கப்படாத நிலையில், இன்னும் சில
நாட்களாகும் என தெரிய வந்துள்ளது.
மாற்றுக் கருத்து
லட்சுமி விலாஸ் வங்கியின் இணைப்புத் திட்டத்துக்கான வரைவு அறிக்கையை, ரிசர்வ் வங்கி தயார் செய்துள்ளது. இந்த புதிய வரைவு திட்டம் குறித்து, லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் டி.பி.எஸ்., வங்கி ஆகியவற்றின் பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள்
உள்ளிடோரிடம் கருத்து கேட்கப்படும் என்றும், மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கலாம் என்றும், ரிசர்வ் வங்கிஅறிவித்திருந்தது.
அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை, 5:00 மணி வரை கருத்துக்கள் கேட்கப்பட்டு, வரைவு அறிக்கை இறுதி செய்யப்படும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி அறிவிப்பு வெளியாகவில்லை.
விலை சரிவு
இறுதி அறிவிப்பு வெளியாக, இன்னும் ஒரு வாரம் வரை ஆகும் என, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த புதிய வரைவு திட்டத்தின்படி, லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்களுக்கு, 1 பைசாவும் கிடைக்காது என்று கூறப்படுகிறது. இவ்வங்கியில், அதிகபட்ச பங்கை வைத்திருக்கும் அதன் பங்குதாரர்களில் ஒருவரான, கே.ஆர்.பிரதீப் வசம் மட்டும், 4.8 சதவீத பங்குகள் உள்ளன.
இதற்கிடையே, கே.ஆர்.பிரதீப், இறுதி வரைவு வெளியாவதை பொறுத்து, மேற்கொண்டு
நடவடிக்கையில் இறங்கப் போவதாகவும்; தன்னுடைய முதலீட்டுக்கு ஏதாவது மதிப்பு கிடைக்க வேண்டும் என்ற தன் கருத்தை ஏற்கனவே தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து, இதுவரை லட்சுமி விலாஸ் வங்கியின்
பங்குகள் விலை, 35சதவீதம் வரை சரிவைக் கண்டுள்ளது.
அனுமதி கொடுக்காத ஆர்.பி.ஐ.,
லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்களில், அதிகபட்ச பங்கை வைத்திருக்கும்
கே.ஆர்.பிரதீப் கடந்த, 2018ம் ஆண்டிலேயே டி.பி.எஸ்., வங்கி, 50 சதவீத பங்குகளை வாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்ததாகவும், ஆனால், ரிசர்வ் வங்கி அதற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த சமயத்தில், டி.பி.எஸ்., வங்கி, வெறும் முதலீட்டை மட்டும் மேற்கொள்ளாமல்,
வங்கியை அதுவே நடத்தவும் விரும்பியது. ஆனால், அதற்கு ரிசர்வ் வங்கி அப்போது அனுமதி அளிக்க மறுத்துவிட்டது என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|