பதிவு செய்த நாள்
22 நவ2020
21:29
பொருளாதார மீட்சி மற்றும் வர்த்தக மீட்சி குறித்து, 77 சதவீத இந்தியர்கள் நம்பிக்கை கொண்டிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
‘டிஜிட்டல்’ கடன் வழங்கும் நிறுவனமான, ‘இந்தியா லெண்ட்ஸ்’ முதல் மற்றும் இரண்டாம் கட்ட நகரங்களில் உள்ளவர்கள் மத்தியில் இம்மாதம் நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்களில், 77 சதவீதம் பேர் பொருளாதார மீட்சி தொடர்பாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.மேலும், 27 சதவீதத்தினர் அடுத்த சில மாதங்களில் பொருளாதார மீட்சி சாத்தியமாகும் என கூறியுள்ளனர்.
அடுத்த ஆறு மாதங்கள் முதல், 12 மாதங்களில் இது சாத்தியமாகும் என, 28 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.ஆய்வில் பங்கேற்றவர்களில், 71 சதவீதத்தினர் அடுத்த சில மாதங்களில் தனிநபர் கடன் வாங்க திட்டமிட்டிருப்பதாகவும், வாகனங்கள் வாங்க, வர்த்தகம் துவங்க, மின்னணு பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த வசதியை நாட உள்ளனர்.
வீட்டு உபயோக பொருட்கள் தொடர்பான செலவுகளை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாக, 46 சதவீதத்தினர் தெரிவித்து உள்ளனர். கணிசமானவர்கள் வரும் மாதங்களில் தங்கள் வீடுகளை சீரமைக்க இருப்பதாகவும் தெரிவித்துஉள்ளனர். சிலர், இதற்காக கடன் பெறவும் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|