தனி நபருக்கு மட்டுமல்ல அரசுக்கும் உதவும் சிறு சேமிப்பு தனி நபருக்கு மட்டுமல்ல அரசுக்கும் உதவும் சிறு சேமிப்பு ...  முத்துாட் முயற்சிக்கு ரிசர்வ் வங்கி தடை முத்துாட் முயற்சிக்கு ரிசர்வ் வங்கி தடை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2020
21:33

வாராக்கடன் பிரச்னையில் சிக்கித் தவித்த லட்சுமி விலாஸ் வங்கி, ரிசர்வ் வங்கியின் வர்த்தக தடை நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே, பி.எம்.சி., வங்கி மற்றும் யெஸ் பாங்க் ஆகிய வங்கிகள் நெருக்கடிக்கு உள்ளான நிலையில், எல்.வி.பி., வங்கி பிரச்னை வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த பின்னணியில் வங்கி வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும், வங்கியின் நிதி ஆரோக்கியத்தை அறிந்து கொள்வதற்கான வழிகளையும் பார்க்கலாம்:


நடைமுறை மாற்றங்கள்:


வங்கி நெருக்கடிக்கு உள்ளாகும் போது அதன் வாடிக்கையாளர்கள் பதற்றம் அடையாமல், தேவையான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தால், சம்பள வரவு, டிவிடெண்ட் வரவு போன்றவற்றை வேறு சேமிப்பு கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்.


முதலீடு அம்சங்கள்:


வங்கி கணக்கில் இருந்து, மியூச்சுவல் பண்ட் முதலீடு உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்தும் வசதியை நாடியிருந்தால், அவை தொடர்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேவை எனில், இதற்கான உத்தரவுகளை மாற்றி சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடன் தவணை செலுத்துவதற்கும் இது பொருந்தும்.


இணைப்புக்கு பின்:


சிக்கலுக்கு உள்ளாகும் வங்கி வேறு வங்கியுடன் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டால், கணக்கை தொடர்வது அல்லது மாற்றிக் கொள்வது பற்றி தீர்மானிக்கலாம். டெபாசிட் மற்றும் கடனுக்கான வட்டி விகிதம் உள்ளிட்ட அம்சங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டும்.


நிதி ஆரோக்கியம்:



வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் நிதி ஆரோக்கியம் பற்றியும் அறிந்திருப்பது அவசியம். இதற்காக, வங்கி போதுமான முதலீடு விகிதத்தை கொண்டுள்ளதா என்பதையும், மொத்த வாராக்கடன் விகிதம் கட்டுக்குள் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். சந்தை மூலதனமும் முக்கிய அம்சமாக அமைகிறது.


வைப்பு நிதி:



வங்கி டெபாசிட்களைப் பொறுத்தவரை, 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பாதுகாப்பு இருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.ஒரே வங்கியில் அதிக தொகையை டெபாசிட் செய்வதை விட, ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் டெபாசிட்களை மேற்கொள்ளலாம். வட்டி பலனை மட்டும் பார்க்காமல், பாதுகாப்பு அம்சத்தையும் பரிசீலிக்க வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)