தொழில் நிறுவனங்களை மேம்படுத்த  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து தொழில் நிறுவனங்களை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ...  ‘பியூச்சர் ரீட்டெய்ல்’ கோரிக்கை நடுவர் மன்றம் ஏற்க மறுப்பு ‘பியூச்சர் ரீட்டெய்ல்’ கோரிக்கை நடுவர் மன்றம் ஏற்க மறுப்பு ...
விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2020
22:24

புதுடில்லி, நவ. 27–விற்பனை செய்யப்படும் பொருட்களில், அவை எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது குறித்த தகவலை தெரிவிக்கவில்லை என கூறி, அமேசான் நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது, அரசு.

மின்னணு வர்த்தக தளத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களில், விலை விபரம் உள்ளிட்ட கட்டாயத் தகவல்களுடன், எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறித்த தகவலையும் தெரிவிக்க வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில், இது குறித்து, ‘அமேசான் மற்றும் பிளிப்கார்ட்’ ஆகிய நிறுவனங்களுக்கு, கடந்த மாதம் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம், ‘நோட்டீஸ்’ அனுப்பிஇருந்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது, பெங்களூரைச் சேர்ந்த, அமேசான் விற்பனையாளர் சேவைகள் நிறுவனத்திற்கும், அதன் ஒவ்வொரு இயக்குனர்களுக்கும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பிளிப்கார்ட்டை பொறுத்தவரை, அதன் மீதான குற்றச் சாட்டுகள் குறித்து விசாரித்த போது, அத்தகைய விதிமுறை மீறல்கள் எதுவும் காணப்படவில்லை என்பதால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில விற்பனையாளர்கள்,தங்களுடைய வர்த்தக தளத்தில் இத்தகைய தகவல்களை தெரிவிக்க வில்லை என கூறி, குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டது அமேசான். இதையடுத்து, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இத்தகைய விதிமீறல்கள் குறித்து அனுப்பப்படும் நோட்டீசுக்கு, திருப்தியளிக்கும் விதத்தில் பதிலளிக்கப்படாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)