பதிவு செய்த நாள்
27 நவ2020
21:10
புதுடில்லி:‘பர்கர் கிங் இந்தியா’ நிறுவனம், டிசம்பர் 2ல், ஐ.பி.ஓ., எனும், புதிய பங்குகளை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், பங்கின் விலை, 59 – 60 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
துரித சேவை உணவகங்களை நாடெங்கும் நடத்தி வரும், பர்கர் கிங் இந்தியா நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு, டிசம்பர் 2ம் தேதி வர இருப்பதாக தெரிவித்துள்ளது. ஒரு பங்கின் விலை, 59 – 60 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம், 810 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.
பங்கு வெளியீடு, டிசம்பர் 4ம் தேதியுடன் நிறைவு பெறும்.நிறுவனம், 7.5 கோடி புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம், 450 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. மேலும், நிறுவனர்களின் ஆறு கோடி பங்குகளையும், 360 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இருக்கிறது.
திரட்டப்படும் நிதியில் புதிய உணவகங்கள் துவக்கவும்,பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்தப்படும். டிசம்பர் 14ம் தேதி, பங்குச் சந்தைகளில் இந்த பங்குகள் பட்டியலிடப்படும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|