பதிவு செய்த நாள்
27 நவ2020
21:19
மும்பை:‘அனுக்ரா ஸ்டாக் அண்டு புரோக்கிங்’ நிறுவனத்தின் உறுப்பினர் தகுதியை நீக்கம் செய்து, உறுப்பினர் பட்டியலிலிருந்து வெளியேற்றி உள்ளது,
தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகள்.சில நாட்களுக்கு முன், ‘கார்வி’ பங்குத் தரகு நிறுவனத்தின் உறுப்பினர் தகுதியை நீக்கம் செய்து அறிவித்தன, பங்குச் சந்தைகள். அடுத்து இப்போது, அனுக்ரா நிறுவனத்தின் மீதும் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றன.
கடந்த, 13ம் தேதியன்று, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி, அனுக்ரா நிறுவனம் விதிமுறைகளை மீறி இருப்பதாக கூறி, விசாரணை முடியும் வரை, அதற்கு தற்காலிக தடை விதிப்பதாக அறிவித்தது. அதிக லாபம் கிடைக்கும் என உறுதி வழங்கி, முதலீட்டாளர்களிடம் பணம் பெற்றது, அவர்களின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றங்களுக்காக, செபி இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டது; நிறுவனத்தின் இயக்குனர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகள், அனுக்ரா நிறுவனத்தின் உறுப்பினர் தகுதியை பறித்துள்ளதாக தெரிவித்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|