பதிவு செய்த நாள்
27 நவ2020
21:21
மும்பை:லட்சுமி விலாஸ் வங்கியை. டி.பி.எஸ்., வங்கியுடன் இணைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இணைப்புக்கு முன்னதாக, லட்சுமி விலாஸ் வங்கியின், 318.20 கோடி ரூபாய் மதிப்பிலான, ‘டயர் – 2’ கடன் பத்திரங்களை, ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில், டயர் – 2 பத்திரங்களில், முதன் முறையாக இப்படி எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையால், பிற வங்கிகள் பாதிக்கப்படும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.பொதுவாக, வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்கள், தேவையான நிதியை திரட்டுவதற்காக, கடன் பத்திரங்களை வெளியிடும். முதலீட்டாளர்களும் இந்த கடன் பத்திரங்களில் முதலீடுகளை மேற்கொள்வர்.
இந்நிலையில், இப்போது லட்சுமி விலாஸ் விஷயத்தில் பத்திரங்களை தள்ளுபடி செய்து விட்டதால், முதலீட்டாளர்களுக்கு எதுவும் கிடைக்காது. இதன் தொடர்ச்சியாக, இனி சிறிய வங்கிகளை நம்பி, கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் அல்லது கடன் வழங்குபவர்கள் தயங்குவர். இது வங்கிகளை, குறிப்பாக சிறிய தனியார் வங்கிகளை பாதிக்கும் என்கின்றனர், நிபுணர்கள்.
இந்நிலையில் இனி, சிறு தனியார் வங்கிகள் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறித் தான், முதலீடுகளை பெற முடியும் என்ற நிலை ஏற்படும். எனவே, ரிசர்வ் வங்கி இப்படி கடன் பத்திரங்களை தள்ளுபடி செய்திருப்பது, சிறு தனியார் வங்கிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|