பதிவு செய்த நாள்
27 நவ2020
21:24
புதுடில்லி:மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, அக்டோபர் மாத இறுதி நிலவரப்படி, 9.53 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, ஆண்டு இலக்கில், 120 சதவீதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறை என்பது, அரசின் செலவுகளுக்கும், வருவாய்க்கும் இடையேயான வித்தியாசமாகும்.கடந்த செப்டம்பர் மாதத்தில், நிதிப் பற்றாக்குறை, ஆண்டு பட்ஜெட் இலக்கில், 114.8 சதவீதமாக இருந்தது. மேலும், கடந்த நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் நிதிப் பற்றாக்குறை, 102.4 சதவீதமாக இருந்தது.
அக்டோபர் மாதத்தில் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதற்கு, வரி வசூல் மோசமாக இருந்தது தான் காரணம் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை, 7.96 லட்சம் கோடி ரூபாயாக அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.5 சதவீதமாக இருக்கும் என நிர்ணயித்திருப்பதாக, பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|