‘பியூச்சர் ரீட்டெய்ல்’ கோரிக்கை நடுவர் மன்றம் ஏற்க மறுப்பு ‘பியூச்சர் ரீட்டெய்ல்’ கோரிக்கை நடுவர் மன்றம் ஏற்க மறுப்பு ...  முக்கிய 8 துறைகள்  வளர்ச்சியில் தொய்வு முக்கிய 8 துறைகள் வளர்ச்சியில் தொய்வு ...
நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்புக்கும் மேலாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2020
21:26

புதுடில்லி:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, இரண்டாவது காலாண்டில், எதிர்பார்த்ததற்கும் மேலாக, வேகமான மீட்சியைக் கண்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், மைனஸ் 7.5 சதவீதமாக இருப்பதாக, அரசு அறிவித்துஉள்ளது. கடந்த நிதியாண்டு, இதே காலத்தில் வளர்ச்சி, 4.4 சதவீதமாக அதிகரித்திருந்தது.

கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் வளர்ச்சி, மைனஸ் 23.9 சதவீதமாக கடும் சரிவைக் கண்டது. கொரோனா பரவலை தடுப்பதற்காக, ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது, இதற்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில், இரண்டாவது காலாண்டில், வளர்ச்சி, மைனஸ் 9.5 சதவீதத்திலிருந்து, மைனஸ் 12 சதவீதம் வரை இருக்கக்கூடும் என, பல நிறுவனங்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு இருந்தன.

ஆனால், எதிர்பார்ப்புக்கும் மேலாக, விரைவான மீட்சி கண்டு, வளர்ச்சி, மைனஸ் 7.5 சதவீதமாக உள்ளது.ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், கடந்த வியாழன்று, நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட வலுவாக இருப்பதாகவும்; தேவைகள் நீடித்திருக்குமா என்பதை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.அவர் கூறியது போலவே, நாட்டின் வளர்ச்சி வலுவாக இருப்பதை, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் தரவுகள் தெரிவிக்கின்றன.


ஜூன் மாதத்திலிருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து வந்துள்ளன. இதன் காரணமாக மீட்சியும் வேகம் பிடித்துள்ளது. அடுத்த வாரம், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் கூடி, வட்டி விகிதங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது. வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதில், பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகள் முக்கிய பங்கு வகிக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)