பதிவு செய்த நாள்
27 நவ2020
21:30
புதுடில்லி:முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த அக்டோபரில், 2.5 சதவீதம்அளவுக்கு சரிவடைந்து உள்ளது.
நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, தொடர்ந்து எட்டாவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது.இதற்கு, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உருக்கு ஆகிய துறைகளில் உற்பத்தி சரிவு ஏற்பட்டது காரணமாக அமைந்து உள்ளது.இதுவே, கடந்த ஆண்டு அக்டோபரில் வளர்ச்சி, 5.5 சதவீதமாக குறைந்து இருந்தது.
கடந்த அக்டோபர்மாதத்தில், உரம், நிலக்கரி, சிமென்ட், மின்சாரம் ஆகிய துறைகளில் வளர்ச்சி காணப்படினும், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உருக்கு ஆகிய துறைகளில் சரிவு ஏற்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் முதல், அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில், முக்கிய துறைகளின் உற்பத்தி, 13 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|