பதிவு செய்த நாள்
29 நவ2020
22:11
வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் மாதத்துடன் முடியும் நிலையில், குறித்த காலத்திற்குள் வரி தாக்கல் செய்வதன் மூலம் பல்வேறு சாதகங்களை பெறலாம்.வழக்கமாக, மார்ச் கடைசிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
எனினும், கொரோனா தாக்கம் காரணமாக, 2019 – 20ம் ஆண்டுக்கான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம், டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் வரி தாக்கல் செய்யும் அவகாசம் முடிந்தாலும், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை தாமதமாக வரி தாக்கல் செய்யலாம். ஆனால், இதற்கு காத்திருக்காமல் உரிய காலத்தில் வரி தாக்கல் செய்வது நல்லது என, வல்லுனர்கள் கருதுகின்றனர்.
உரிய காலத்தில் வரி தாக்கல் செய்யாத போது, முந்தைய கால வருமானத்தின் நஷ்டத்தை கணக்கில் கொண்டு செல்ல முடியாது. மேலும், ‘ரீபண்ட்’ பெறும் போது, அதில் தாமதம் ஏற்படும் காலத்திற்கான வட்டி கிடைக்காது. அதே நேரத்தில், பிடித்தம் செய்யப்பட்டதை விட கூடுதல் வரி செலுத்த வேண்டியிருந்தால், இடைப்பட்ட காலத்திற்கு அபராதம் செலுத்த வேண்டும். இவை தவிர, தாமத கட்டணமும் செலுத்த வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|