பதிவு செய்த நாள்
01 டிச2020
22:11
புதுடில்லி:‘ஐ.எச்.எஸ்., மார்கிட் இந்தியா’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், நவம்பர் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, பி.எம்.ஐ., குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்.
50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.நவம்பர் மாதத்தில் இக்குறியீடு, 56.3 புள்ளிகளுக்கு உயர்ந்ததன் மூலம், வலுவான முன்னேற்றத்தை உணர்த்தியுள்ளது. அதற்கு முந்தைய இரு மாதங்களுடன் ஒப்பிடும்போது, வளர்ச்சியின்வேகம் குன்றியுள்ளது.
நிறுவனங்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் காரணத்தால், வேலைவாய்ப்பும் மீண்டும் குறைந்துள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தயாரிப்பு துறை, மீட்புக்கான சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும், கொரோனா தொடர்பான நிச்சயமற்ற தன்மை, வணிக நம்பிக்கையை
குறைப்பதாக இருக்கிறது. இதனால், நவம்பர் மாதத்தில் வணிக நம்பிக்கை சற்று குறைந்து விட்டது.
பாலியானா டி லிமா,
பொருளாதார துணை இயக்குனர்,
ஐ.எச்.எஸ்., மார்கிட்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|