பதிவு செய்த நாள்
01 டிச2020
22:19
மும்பை:உலகம் முழுக்க கிளை பரப்பி, செயல்பட்டு வரும், ‘பாட்டா’ நிறுவனத்தின், 126 ஆண்டு கால சரித்திரத்தில், முதன் முறையாக, ஒரு இந்தியர், அதன் உலகளாவிய தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, ‘பாட்டா இந்தியா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் சந்தீப் கட்டாரியா, உலகளவிலான பாட்டாவின் தலைமை செயல் அதிகாரியாக
நியமிக்கப்பட்டு இருக்கிறார்.சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட, பாட்டா
நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கும் சந்தீப் கட்டாரியாவுக்கு, வயது, 49.டில்லி, ஐ.ஐ.டி., யில் பொறியியல்பட்டம் பெற்றவர்.கடந்த, 2017ம் ஆண்டில் தான், பாட்டாவின் தலைமை செயல் அதிகாரியாக பணியேற்றார்.
இதற்கு முன், ‘யுனிலீவர், வோடபோன்’ உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம்
கொண்டவர்.‘மைக்ரோசாப்ட், ஐ.பி.எம்., கூகுள்’ என பல முக்கியமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், இந்தியர்கள் தலைமை பொறுப்பை ஏற்றிருப்பினும், சந்தீப் தலைமை பொறுப்பை ஏற்றிருப்பது, காலணி தயாரிப்பு எனும் வேறு வகையான நிறுவனத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்டா, 70க்கும் மேற்பட்ட நாடுகளில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|