பதிவு செய்த நாள்
01 டிச2020
22:21
மும்பை:இந்திய பங்குச் சந்தைகள், நேற்று மீண்டும் வரலாற்று சாதனையை ஏற்படுத்தி உள்ளன.
அன்னிய முதலீடு, ரூபாய் மதிப்பு அதிகரிப்பு, ஆசிய சந்தைகளின் சாதகமான நிலை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு ஆகியவை காரணமாக, சந்தைகள் உயர்ந்தன.மும்பை
பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், நேற்றைய வர்த்தகத்தில் முதன் முறையாக, 44,655.44 புள்ளிகளை எட்டி, சாதனை படைத்தது.இதைப் போலவே, தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 13,190.05 புள்ளிகளை தொட்டது.
நேற்றைய வர்த்தகத்தில், தொலை தொடர்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. அன்னிய முதலீட்டாளர்களும் அதிக அளவில் முதலீடுகளை
மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வெள்ளியன்று மட்டும், 7,000 கோடி ரூபாய்க்கும்
அதிகமாக முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|