பதிவு செய்த நாள்
02 டிச2020
21:58
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில், 17.84
சதவீதம் சரிவை கண்டிருப்பதாக, வர்த்தக துறை செயலர் அனுப் வாத்வான் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் இறக்குமதியும், 33.56 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவித்துள்ளதாவது:நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள்,
பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றை நீக்கி விட்டு பார்த்தால், ஏற்றுமதியில் இந்த சரிவு
மிகவும் குறைவானது தான்.
குறிப்பிட்ட துறைகளை இனம் கண்டு, அவற்றின் வளர்ச்சிக்கான முயற்சிகளில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இம்முயற்சியில், மாநில அரசுகளும் துணை நிற்க வேண்டும்.இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|