‘ரிலையன்ஸ் ஜியோ’ வசமானது அனில் அம்பானியின் நிறுவனம்‘ரிலையன்ஸ் ஜியோ’ வசமானது அனில் அம்பானியின் நிறுவனம் ... ‘ஜியோ’வை முந்திய ‘ஏர்டெல்’ ‘ஜியோ’வை முந்திய ‘ஏர்டெல்’ ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2020
21:04

புது­டில்லி:ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கை குழு கூட்­டத்­தின் முடி­வில், நேற்று முக்­கி­ய­மான பல அறி­விப்­பு­களை வெளி­யிட்­டுள்­ளது.

* முத­லா­வ­தாக, ரெப்போ வட்டி விகி­தத்தை மாற்­றா­மல், தற்­போ­தி­ருக்­கும், 4 சத­வீ­தம் எனும் அதே நிலையை தொடர இருப்­ப­தாக அறி­வித்­துள்­ளது. இத­னால் வீட்­டுக் கடன், வாக­னக் கடன் ஆகி­ய­வற்­றுக்­கான வட்­டி­யி­லும் பெரிய மாற்­றங்­கள் இருக்க வாய்ப்­பில்லை

* மேலும் வங்­கி­களின் டிபா­சிட்­டு­க­ளுக்­காக, ரிசர்வ் வங்கி வழங்கும், ரிவர்ஸ் ரெப்போ
வட்டி விகி­தத்­தி­லும் எந்த மாற்­ற­மும் செய்­யப்­ப­டா­மல், தற்­போது நடை­மு­றை­யில் இருக்­கும், 3.35 சத­வீ­தம் என்ற நிலையே தொட­ரும்

* பண­வீக்­கம் அதி­க­ரித்­துள்ள நிலை­யில், அதை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு உத­வும் வகை­யில், வட்டி விகி­தத்­தில் எந்த மாற்­றத்­தை­யும் ரிசர்வ் வங்கி மேற்­கொள்­ள­வில்லை என,
தெரி­வித்­துள்­ளது

* நடப்­பாண்­டில், கடந்த பிப்­ர­வரி மாதத்­தி­லி­ருந்து இது­வரை, 1.15 சத­வீ­தம் அள­வுக்கு ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பை அறி­வித்து உள்­ளது


* நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, மைனஸ் 7.5 சத­வீ­த­மாக இருக்­கும் என, அறி­வித்­து உள்­ளது. இதற்கு முன், அக்­டோ­ப­ரில், மைனஸ் 9.5 சத­வீ­த­மாக இருக்­கும் என,
தெரிவித்­தி­ருந்­தது

* மூன்­றா­வது காலாண்­டில், பொரு­ளா­தா­ரம், 0.1 சத­வீ­த­மா­க­வும்; நான்­கா­வது காலாண்­டில், 0.7 சத­வீ­த­மா­க­வும் வளர்ச்சி பெறும்

* சில்­லரை விலை பண­வீக்­கம், மூன்­றா­வது காலாண்­டில், 6.8 சத­வீ­த­மா­க­வும்; நான்­கா­வது காலாண்­டில், 5.8 சத­வீ­த­மா­க­வும் இருக்­கும்

* அடுத்த மாதத்­தி­லி­ருந்து, கை படா­மல் பணம் செலுத்­தும், ‘கான்­டாக்ட்­லெஸ் கார்டு’ பணப் பரி­மாற்­றத்­துக்­கான வரம்பை, 2,000 ரூபா­யி­லி­ருந்து, 5,000 ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ள­தாக
தெரி­வித்­து உள்­ளது

* பெரிய அள­வி­லான தொகையை செலுத்­து­வ­தற்­கான, ஆர்.ஜி.டி.எஸ்., முறை­யி­லான பணப் பரி­மாற்­றத்தை, அடுத்த சில நாட்­க­ளி­லி­ருந்து, அனைத்து நாட்­க­ளி­லும், எல்லா நேரங்­க­ளி­லும் செய்து கொள்­ள­லாம்

* வங்­கி­கள் மற்­றும் கூட்­டு­றவு வங்­கி­கள், கடந்த நிதி­யாண்­டிற்­கான ஈவுத் தொகையை வழங்­கா­மல், லாபத்தை தங்­க­ளி­டமே தக்க வைத்­துக் கொள்ள வேண்­டும் என்­றும் அறி­வித்­து
உள்­ளது

* வங்கி டிஜிட்­டல் சேவை­களில் புகார்­கள் எழு­வதை அடுத்து, அது குறித்த பாது­காப்பு மற்­றும் கட்­டுப்­பாட்­டுக்­கான வழி­காட்­டு­தல்­களை வழங்க இருப்­ப­தா­க­வும், ரிசர்வ் வங்கி தெரி­வித்­துஉள்­ளது.
வங்கி மீட்பு நட­வ­டிக்­கை­களின் போது, யெஸ் பேங்க், லட்­சுமி விலாஸ் வங்கி ஆகி­ய­வற்­றின்
பங்­கு­கள், பத்­தி­ரங்­களை தள்­ளு­படி செய்­தது, முழுக்க முழுக்க டெபா­சிட்­தா­ரர்­கள் நலன் கருதி, விதி­மு­றை­களின் படி எடுக்­கப்­பட்ட முடி­வா­கும். பெரு நிறு­வ­னங்­கள் வங்கி துவங்க
அனும­திக்­க­லாம் என ரிசர்வ் வங்கி குழு ஆலோ­சனை தெரி­வித்­துஉள்­ளதே தவிர, அதுவே ரிசர்வ் வங்­கி­யின் பார்­வை­யல்ல.


சக்­தி­காந்த தாஸ்

கவர்­னர், ரிசர்வ் வங்கி

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)