பதிவு செய்த நாள்
04 டிச2020
21:04
புதுடில்லி:ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், நேற்று முக்கியமான பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
* முதலாவதாக, ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல், தற்போதிருக்கும், 4 சதவீதம் எனும் அதே நிலையை தொடர இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றுக்கான வட்டியிலும் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை
* மேலும் வங்கிகளின் டிபாசிட்டுகளுக்காக, ரிசர்வ் வங்கி வழங்கும், ரிவர்ஸ் ரெப்போ
வட்டி விகிதத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படாமல், தற்போது நடைமுறையில் இருக்கும், 3.35 சதவீதம் என்ற நிலையே தொடரும்
* பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில், வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை என,
தெரிவித்துள்ளது
* நடப்பாண்டில், கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை, 1.15 சதவீதம் அளவுக்கு ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பை அறிவித்து உள்ளது
* நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மைனஸ் 7.5 சதவீதமாக இருக்கும் என, அறிவித்து உள்ளது. இதற்கு முன், அக்டோபரில், மைனஸ் 9.5 சதவீதமாக இருக்கும் என,
தெரிவித்திருந்தது
* மூன்றாவது காலாண்டில், பொருளாதாரம், 0.1 சதவீதமாகவும்; நான்காவது காலாண்டில், 0.7 சதவீதமாகவும் வளர்ச்சி பெறும்
* சில்லரை விலை பணவீக்கம், மூன்றாவது காலாண்டில், 6.8 சதவீதமாகவும்; நான்காவது காலாண்டில், 5.8 சதவீதமாகவும் இருக்கும்
* அடுத்த மாதத்திலிருந்து, கை படாமல் பணம் செலுத்தும், ‘கான்டாக்ட்லெஸ் கார்டு’ பணப் பரிமாற்றத்துக்கான வரம்பை, 2,000 ரூபாயிலிருந்து, 5,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக
தெரிவித்து உள்ளது
* பெரிய அளவிலான தொகையை செலுத்துவதற்கான, ஆர்.ஜி.டி.எஸ்., முறையிலான பணப் பரிமாற்றத்தை, அடுத்த சில நாட்களிலிருந்து, அனைத்து நாட்களிலும், எல்லா நேரங்களிலும் செய்து கொள்ளலாம்
* வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள், கடந்த நிதியாண்டிற்கான ஈவுத் தொகையை வழங்காமல், லாபத்தை தங்களிடமே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்து
உள்ளது
* வங்கி டிஜிட்டல் சேவைகளில் புகார்கள் எழுவதை அடுத்து, அது குறித்த பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான வழிகாட்டுதல்களை வழங்க இருப்பதாகவும், ரிசர்வ் வங்கி தெரிவித்துஉள்ளது.
வங்கி மீட்பு நடவடிக்கைகளின் போது, யெஸ் பேங்க், லட்சுமி விலாஸ் வங்கி ஆகியவற்றின்
பங்குகள், பத்திரங்களை தள்ளுபடி செய்தது, முழுக்க முழுக்க டெபாசிட்தாரர்கள் நலன் கருதி, விதிமுறைகளின் படி எடுக்கப்பட்ட முடிவாகும். பெரு நிறுவனங்கள் வங்கி துவங்க
அனுமதிக்கலாம் என ரிசர்வ் வங்கி குழு ஆலோசனை தெரிவித்துஉள்ளதே தவிர, அதுவே ரிசர்வ் வங்கியின் பார்வையல்ல.
சக்திகாந்த தாஸ்
கவர்னர், ரிசர்வ் வங்கி
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|