பதிவு செய்த நாள்
04 டிச2020
21:14
மும்பை:பெரு நிறுவனங்கள் வங்கிகள் துவங்க அனுமதி வழங்குவது, சரியான
அணுகுமுறையாக இருக்கும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
பெரு நிறுவனங்கள் வங்கிகள் துவங்குவதற்கு, உரிமம் வழங்கலாம் என, ரிசர்வ் வங்கி குழு, அண்மையில் தன்னுடைய பரிந்துரையில் தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்த பரிந்துரை, பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்
ரகுராம் ராஜன் உள்ளிட்ட பலர், குழுவின் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தர நிர்ணய நிறுவனமான இக்ரா, இது பாசிட்டிவ்வான முயற்சியாகும் என்று தெரிவித்துள்ளது. தனியார் வங்கி துறையில், மிகப் பெரிய வங்கிகளுக்கான தேவைகள்
உள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.மேலும், அரசால் வங்கிகளுக்கு அதிக அளவில்
மூலதனம் வழங்க முடியாமல் இருக்கும் நிலையில், பெரு நிறுவனங்கள் வங்கிகள் துவங்க, உரிமம் அளிப்பது சரியானது தான் என்றும் இக்ரா கூறியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|