பதிவு செய்த நாள்
05 டிச2020
20:45
புதுடில்லி:இதுவரை மொரீஷியஸ் நாட்டிலிருந்து, அதிகளவிலான அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது, அந்த இடத்தை, கேமேன் தீவுகள் கைப்பற்றி உள்ளன.
கடந்த, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், கிட்டத்தட்ட, 15 ஆயிரத்து, 540 கோடி ரூபாய் அளவுக்கு, அன்னிய நேரடி முதலீடுகள், நம் நாட்டுக்கு, கேமேன் தீவுகளிலிருந்து வந்துள்ளன.
நேரடி முதலீடு
கேமேன் தீவுகளில்இருந்து, அதிகளவில் அன்னிய நேரடி முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதற்கு முக்கிய காரணம், சிங்கப்பூர் மற்றும் மொரீஷியஸ் நாடுகளின் வரி ஒப்பந்தங்களில், அண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான். இந்த வரி மாறுதல்களால், முதலீட்டாளர்களுக்கான வரி ஆதாயம் குறைந்து போனது.
கடந்த நிதியாண்டில், இந்தியாவுக்கு அன்னிய நேரடி முதலீடுகளை மேற்கொள்ளும் நாடுகள் பட்டியலில், மொரீஷியஸ், இரண்டாவது இடத்தில் இருந்தது. இப்போது, கேமேன் தீவுகள், மொரீஷியசை பின்னுக்குத் தள்ளி, மூன்றாவது, இடத்துக்கு வந்துள்ளது. முதல் இரண்டு இடங்களை முறையே, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. நான்காவது இடத்துக்கு, மொரீஷியஸ் தள்ளப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் வரி
கேமேன் தீவுகள் என்பது, மேற்கு கரீபியன் கடலில் இருக்கும், மூன்று தீவுகளை உள்ளடக்கியதாகும். இங்கு கார்ப்பரேட் வரி, தனிநபர் வரி, நேரடி வரி என எதுவும் கிடையாது. கார்ப்பரேட் வரி கிடையாது என்பதால், அன்னிய நேரடி முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடுகளை, கேமேன் தீவுகளிலிருந்து அதிகளவில் மேற்கொள்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|