பதிவு செய்த நாள்
05 டிச2020
20:51
புதுடில்லி:லட்சுமி விலாஸ் வங்கியுடனான ஒருங்கிணைப்பு சம்பந்தமான நடவடிக்கைகள் முடிந்ததும், வாடிக்கையாளர்கள், வங்கியின் அனைத்து விதமான சேவைகளையும் பெற முடியும் என, டி.பி.எஸ்., வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், டி.பி.எஸ்., வங்கியின் மிக சிறந்த டிஜிட்டல் பேங்கிங் சேவைகளையும், வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்றும், இவ்வங்கி தெரிவித்துள்ளது.இந்த இரு வங்கிகளின் இணைப்பும், கடந்த மாதம், 27ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இது குறித்து, டி.பி.எஸ்., வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்த ஒருங்கிணைப்பினால், லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் டெபாசிட்தாரர்களுக்கு முன்பிருந்த நிச்சயமற்ற நிலை மாறி, சிறந்த வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. மேலும், ஊழியர்களுக்கு ஸ்திரத்தன்மையும் ஏற்பட்டுள்ளது.அத்துடன், மூலதன நிதியாக, 2,500 கோடி ரூபாயை, சிங்கப்பூர் டி.பி.எஸ்., வங்கியிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து, வங்கியின் மூலதனம், ஒழுங்குமுறை அமைப்புகள் குறிப்பிட்டிருக்கும் வரம்பை விட அதிகமாகவே இருக்கிறது.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|