பதிவு செய்த நாள்
05 டிச2020
20:53
மும்பை:எந்த வங்கிகளில், அதிகளவிலான வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் வருகின்றனவோ; அந்த வங்கிகளே, இனிமேல் வங்கி குறைதீர்ப்பாளர் மன்றத்துக்கு ஆகும் செலவை ஏற்க வேண்டியதிருக்கும், என ரிசர்வ் வங்கி, அதன் நிதி கொள்கை அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
வங்கிகளில், வாடிக்கையாளர்களுக்கு குறைகள் தீர்க்கப்படாமல் இருக்குமானால், அதை தீர்ப்பதற்காக, வங்கிக்கான, ‘ஒம்புட்ஸ்மேன்’ எனும் குறைதீர்ப்பாளரை அணுகி, முறையிடலாம்.ஆனால், சமீப காலமாக, வாடிக்கையாளர்கள் குறைகளை தீர்த்து வைப்பதில், வங்கிகள் அதிக அக்கறை காட்டாததால், குறைதீர்ப்பாளரிடம் அதிகளவிலான முறையீடுகள் வருகின்றன.
இதனையடுத்து, ரிசர்வ் வங்கி, இந்த போக்கை தடுத்து நிறுத்தும் வகையில், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர் குறைகளைக் கொண்ட வங்கிகள், இனி அதற்கான, ஒம்புட்ஸ்மன் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டியதிருக்கும் என தெரிவித்துள்ளது.
இந்த குறைதீர்ப்பாளர் அமைப்பானது, ரிசர்வ் வங்கியால், 2006ல் ஏற்படுத்தப்பட்டது.வங்கிகளே குறைதீர்ப்பாளர் அமைப்புக்கான செலவை ஏற்றுக் கொள்ள சொல்வதன் மூலம் வங்கிகளுக்கு பொறுப்பு அதிகரிப்பதுடன்; ரிசர்வ் வங்கியும் தன்னுடைய செலவை குறைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|