பதிவு செய்த நாள்
08 டிச2020
22:12
புதுடில்லி:ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அடுத்த ஆண்டின் பிற்பகுதியில், 5ஜி சேவைகளை துவங்க வாய்ப்பிருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை
நேற்று, புதுடெல்லியில் துவங்கிய,‘இந்திய மொபைல் காங்கிரஸ் 2020’ தொழில்நுட்ப
கண்காட்சியில் துவக்க உரை ஆற்றிய, முகேஷ் அம்பானி மேலும் பேசியதாவது:தொழில் நுட்ப ரீதியாக, சிறப்பாக இணைக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக, இந்தியா தற்போது உள்ளது. இந்த நிலை தொடர, நாட்டில் விரைவாக, 5ஜி சேவையை அறிமுகம் செய்வதோடு; அது,
மலிவாக அனைத்து இடங்களிலும் கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் தேவைப்படுகிறது.
அடுத்த ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவின், 5ஜி புரட்சிக்கு, ஜியோ முன்னோடியாகஇருக்கும். அதுமட்டுமின்றி; அரசின் எழுச்சிமிக்க, ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்திற்கு, ஒரு சாட்சியாகவும் அது விளங்கும். இருப்பினும், நாட்டில் இன்னும், 30 கோடி பேர்,
2ஜி காலத்திலேயே பின்தங்கி இருக்கிறார்கள். இந்த வறிய மக்களுக்கு, மலிவு விலையில் ஸ்மார்ட்போன் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தேவை.இதனால்
அவர்களும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கு கொண்டு, அரசின் உதவிகளை, நேரடியாக அவர்களே பெற்று பயனடைய முடியும்.
5 லட்சம் கோடி
இந்தியா, இரண்டு தனித்துவமான பலங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று துடிப்பான ஜனநாயகம், இளைஞர்களை அதிகம் கொண்ட மக்கள் தொகை, டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றின்கூட்டாகும்.இரண்டாவது, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு
மற்றும்அவரது ஆற்றல் மிக்க தலைமை. இந்த இரண்டு பலங்களின் மூலம், இந்தியா,
5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக விரைவில் உயரும்.இவ்வாறு அவர்கூறியுள்ளார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|