பதிவு செய்த நாள்
08 டிச2020
22:20
புதுடில்லி:பயணியர் வாகன சில்லரை விற்பனை, நவம்பர் மாதத்தில், 4.17 சதவீதம்
அதிகரித்திருப்பதாக, வாகன முகவர்கள் கூட்டமைப்பான, எப்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.மேலும் தெரிவித்துள்ளதாவது:இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், வர்த்தக வாகனம் ஆகிய வற்றின் விற்பனை சரிவைக் கண்டுள்ளது. இருப்பினும், டிராக்டர் விற்பனை
அதிகரித்துள்ளது.
பயணியர் வாகனத்தை பொறுத்தவரை, புதிய வாகனங்களின் அறிமுகங்களுக்கு, வரவேற்பு கிடைத்துள்ளது.இருசக்கர வாகன விற்பனையை பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள்
ஆர்வம், 100 சி.சி., திறன்கொண்ட வாகனத்திலிருந்து, 125 சி.சி., வாகனத்துக்கு மாறுவது தொடர்ந்துஅதிகரித்து வருகிறது.சிறிய ரக வர்த்தக வாகன தேவையும்அதிகரித்துள்ளது.
பெரும்பாலான இடங்களில் பள்ளி, கல்லுாரிகள் திறக்காமல் இருப்பதால், பேருந்து விற்பனை குறைந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|