பதிவு செய்த நாள்
09 டிச2020
21:24
புதுடில்லி: அடுத்த மூன்று மாதங்களில், நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கத் துவங்கும் என்பது, ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
‘மேன்பவர் குரூப்’ நிறுவனம், 1,518 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு, இதை தெரிவித்துள்ளது.ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்களால், நிறுவனங்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், அதிகளவிலான பேரை பணியில் அமர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
பண்டிகை காலத்தில் தேவைகள் அதிகரிக்கத் துவங்கியதன் தொடர்ச்சியாக, கிட்டத்தட்ட, 65 சதவீத நிறுவனங்கள், கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு வந்து விடும் நம்பிக்கையுடன் உள்ளன. மேலும் அவை, அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில், அதிக நபர்களை பணியில் அமர்த்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|