பதிவு செய்த நாள்
09 டிச2020
21:30
புதுடில்லி:ஏமாற்றும் நோக்கத்துடனான போலி தொலைபேசி அழைப்புகள் எண்ணிக்கை, நடப்பு ஆண்டில் குறைந்துள்ளதாக, ‘ட்ரூகாலர்’ நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு உலகளவில், இத்தகைய அழைப்புகளை அதிகம் கொண்டிருந்த நாடுகளில், இந்தியா ஐந்தாவது இடத்தில் இருந்தது. தற்போது அழைப்புகள் எண்ணிக்கை குறைந்துவிட்ட நிலையில், ஒன்பதாவது இடத்துக்கு வந்துள்ளது.நடப்பு ஆண்டில், இந்தியாவில் இத்தகைய அழைப்புகள் எண்ணிக்கை, 34 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இன்னும் உலகளவில், முதல், 10 நாடுகளில் ஒன்றாக, இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது.
முதல், 10 நாடுகள் பட்டியலில், அமெரிக்கா, இந்தோனேஷியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளும் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை, 98.5 சதவீத போலி அழைப்புகள், உள்நாட்டிலிருந்து செய்யப்பட்டதாக உள்ளது.நடப்பு ஆண்டில், இத்தகைய அழைப்புகள் அதிகம் பெற்ற மாநிலமாக குஜராத் உள்ளது.
இதையடுத்து, மஹாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.நடப்பு ஆண்டில், இந்தியாவில் இத்தகைய அழைப்புகள் குறைந்ததற்கு, கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு முக்கிய பங்காற்றி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|