பதிவு செய்த நாள்
09 டிச2020
21:32
மும்பை:கொரோனா காலத்தில், உலகளவில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதில், இந்தியா முன்னிலை வகிப்பதாக, ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது.‘பி.டபுள்யு.சி., இந்தியா’ எனும் ஆலோசனை நிறுவனத்தின், உலகளவிலான ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
கொரோனாவால் தனிநபர்களும், நிறுவனங்களும் கடுமையான பாதிப்புக்கு ஆளானது ஒருபுறம் இருக்க, அதேசமயம், நிறுவனங்கள், உயர் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதில், இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை, ஆய்வில் பங்கேற்ற, 200 தலைமை அதிகாரிகளில், 94 சதவீதம் பேர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நடைமுறை படுத்தியிருப்பதாகவோ அல்லது அதற்கான திட்டங்களை வைத்து இருப்பதாகவோ தெரிவித்துள்ளனர். உலகம் முழுக்க மொத்தம், 670 உயர் அதிகாரிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|