பதிவு செய்த நாள்
09 டிச2020
21:33
புதுடில்லி:‘பிராங்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்டு’ நிறுவனம், தன், ஆறு பண்டு திட்டங்களை நிறுத்தி விடுவது குறித்து, முதலீட்டாளர்களின் கருத்தை, வரும், 26 – 28ம் தேதிகளில் கேட்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மின்னணு மூலமான முதலீட்டாளர்களின் ஓட்டளிப்பை மேற்பார்வையிட, ஒரு பார்வையாளரை நியமிக்குமாறு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யை, உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.பிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனம், கடன் சார்ந்த ஆறு மியூச்சுவல் திட்டங்களை நிறுத்தி விடுவதாக, கடந்த ஏப்ரல் மாதம், 23ம் தேதியன்று திடீரென அறிவித்தது.
இதையடுத்து, இவ்விவகாரம், உச்ச நீதிமன்றம் வரை சென்றது. உச்ச நீதிமன்றமும், ஒரு வார காலத்துக்குள், முதலீட்டாளர்களின் கருத்தை கேட்கும்படி உத்தரவிட்டது.இதையடுத்து, பிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனம், 26 – 28 ஆகிய மூன்று நாட்களில், முதலீட்டாளர்கள் இத்திட்டங்களை நிறுத்தி விடுவதா அல்லது தொடர்வதா என்பது குறித்து, ‘ஆன்லைன்’ மூலம், தங்கள் ஓட்டுகளை செலுத்தலாம் என, தெரிவித்துள்ளது.இதன்பின், 29ம் தேதிஅன்று முதலீட்டாளர்களுடன் இது குறித்த கூட்டம் ஒன்றையும் நடத்த இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|