பதிவு செய்த நாள்
12 டிச2020
21:46

புதுடில்லி:மத்திய அரசின், அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 2.05 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கான ஒப்புதலை,
இதுவரை வங்கிகள் வழங்கி உள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, 100 சதவீத, அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக, 3 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி அறிவித்து
இருந்தது.கொரோனா பரவல்காரணமாக ஏற்பட்ட, பொருளாதார மந்த நிலை பாதிப்பிலிருந்து மீள்வதற்கு உதவும் வகையில், இந்த நிதி தொகுப்பை, மத்திய நிதியமைச்சகம் அறிவித்து இருந்தது.
இதுவரை, 2.05 லட்சம் கோடி ரூபாய் கடன்களுக்கான ஒப்புதல், வழங்கப்பட்டுள்ளது.மேலும், கடந்த, 4ம் தேதி வரையிலான காலத்தில், 40 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 1.59 லட்சம் கோடி ரூபாய்க்கான கடன்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|