மருத்துவக் காப்பீடு பாலிசி பிரிமீயம் உயர்வது ஏன்? மருத்துவக் காப்பீடு பாலிசி பிரிமீயம் உயர்வது ஏன்? ... போலி ரசீது முறைகேடுகளுக்கு 'செக்' 'இ - இன்வாய்சிங்' முறை அமல் போலி ரசீது முறைகேடுகளுக்கு 'செக்' 'இ - இன்வாய்சிங்' முறை அமல் ...
2020 கற்றுத் தந்துள்ள முக்கிய பாடங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2020
22:00

உலக நாடுகளுக்கும் சரி, தனி மனிதர்களுக்கும் சரி, விடை பெற இருக்கும், 2020ம் ஆண்டு சோதனை மிக்கதாக அமைந்துள்ளது. கொரோனா தொற்றால் உண்டான பொது முடக்கம், பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்தது. பலரும், பணி இழப்பு மற்றும் ஊதிய குறைப்பு உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இயல்பு நிலை என்பது தலைகீழாக மாறி, எங்கும் புதிய இயல்பு உண்டானது. இந்த பாதிப்புகளில் இருந்து பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் நிலையில், 2020ம் ஆண்டு கற்றுத் தந்துள்ள நிதி பாடங்களை நினைவில் கொள்வது நல்லது.


சேமிப்பு முக்கியம்:



கொரோனா உண்டாக்கிய புதிய இயல்பு நிலை, சேமிப்பின் அருமையை அனைவருக்கும் புரிய வைத்தது. வேலை இழப்பு அல்லது ஊதிய குறைப்பை எதிர்கொள்ளும் போது, கைவசம் சேமிப்பு இருப்பது எத்தனை ஆசுவாசம் அளிக்கக்கூடியது என்பதை பலரும் நடைமுறையில் உணர்ந்தனர்.


செலவு பழக்கம்:



சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியதோடு, அதற்கான வழியையும் இந்த ஆண்டு கண்டறிய வைத்துள்ளது. கொரோனாவின் ஆரம்ப மாதங்களில், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த சூழல், செலவுகளை தானாக கட்டுப்படுத்தியது. அதைவிட முக்கியமாக, எவை எல்லாம் அனாவசிய செலவுகள் என புரிய வைத்தது.


காப்பீடு தேவை:



கொரோனா பாதிப்பு, மருத்துவக் காப்பீட்டின் அவசியத்தையும் தெளிவாக உணர்த்தியுள்ளது. எதிர்பாராத மருத்துவ நெருக்கடியை சமாளிக்க, மருத்துவக் காப்பீடு பாதுகாப்பு எத்தனை அவசியம் என்பது புரிந்துள்ளது. விரிவான மருத்துவக் காப்பீடு பாலிசி தவிர, கொரோனா காப்பீடு போன்ற குறிப்பிட்ட நோக்கிலான பாலிசிகளும் அவசியம்.


கடன் சுமை:


கொரோனா பாதிப்பு சூழலில், கடன் சுமை இல்லாதவர்கள் ஆசுவாசமாக உணர்ந்தனர். மாறாக, ‘கிரெடிட் கார்டு’ கடன் அல்லது தனிநபர் கடன் பெற்றிருந்தவர்கள் நெருக்கடியை உணர்ந்தனர். அதிலும் குறிப்பாக பணி இழப்புக்கு உள்ளானவர்கள், கடன் சுமையால் அவதிப்பட்டனர். தேவையில்லாத கடன்களை தவிர்ப்பது அவசியம் எனும் புரிதல் ஏற்பட்டுள்ளது.


முதலீடு உத்தி:


இந்த ஆண்டு, தங்கத்தின் விலை ஏறியது; பங்குச் சந்தை, ஆரம்ப சரிவுக்கு பின் ஏற்றம் கண்டது; ரியல் எஸ்டேட், நெருக்கடிக்கு உள்ளானது. இப்படி பல்வேறு வகையான முதலீடுகள், கொரோனா சூழலில் பலவிதமான பாதிப்புக்கு உள்ளான நிலையில், பல்வேறு பிரிவுகளின் கீழ், முதலீடுகளை பரவலாக மேற்கொள்வதன் அவசியமும் புரிந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)