பதிவு செய்த நாள்
15 டிச2020
20:32
புதுடில்லி:‘பேஸ்புக்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியுடன், ‘டிஜிட்டல் இந்தியாவில் பங்குபெறுவது’ எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடினார்.
இருவரும், 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்கள் குறித்தும் பேசினர்.
ரிலையன்ஸ் நிறுவனம், இந்தியாவில், 4ஜி புரட்சியை ஏற்படுத்தியது என்றும்; அதன் அடுத்தகட்ட இலக்காக, 5ஜி இருப்பதாகவும், மார்க் தெரிவித்தார். உரையாடலின்போது, ‘அடுத்தகட்டமாக, இப்போது வேறு எந்த தொழில்நுட்பங்கள் அல்லது முன்னேற்றங்கள் குறித்து ஆவலாக இருக்கிறீர்கள்? அடுத்த, 5 அல்லது, 10 ஆண்டுகளில் நாடு எப்படி இருக்கும் என கருதுகிறீர்கள்’ என்ற கேள்வியை, முகேஷ் அம்பானியிடம் எழுப்பினார், மார்க்.இதற்கு பதிலளித்த முகேஷ் அம்பானி, ‘இப்போது, 5ஜி தொழில்நுட்பத்தில் நாம் ஒருங்கிணைந்திருப்பதை பார்க்கிறேன்.
எங்கள் பிரதமர், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும், 5ஜி தொழில் நுட்பம் இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார். ‘அப்படி நாட்டை டிஜிட்டல் மயமாக்கிய பிறகு, அடுத்த, 20 ஆண்டுகளில், இந்தியா, முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக உயர்ந்திருக்கும். ‘இளம் தொழிலாளர்கள், நாட்டின் பொருளாதாரத்துக்கு உந்து சக்தியாக இருப்பார்கள். அவர்களது வருமானமும் அதிகரிக்கும்’ என தெரிவித்தார்.
உரையாடலின் போது மார்க், தங்களுடைய நிறுவனத்தை பொறுத்தவரை, இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும் என்றும், ‘வாட்ஸ் ஆப் பே’ சேவையை துவங்க முடிந்ததற்கு காரணம், நாட்டின் யு.பி.ஐ., சிஸ்டம் மற்றும் 140 வங்கிகள் கூட்டு ஆகியவை கிடைத்தது தான். இதைப் போன்று எதையும் செய்யும் முதல் நாடு இந்தியாதான் என்றும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|