பதிவு செய்த நாள்
16 டிச2020
21:15
புதுடில்லி:கொரோனா பரவலை அடுத்து, பார்ட்டிகளை வெளியில் நடத்துவதைவிட, தங்கள் இடத்திலேயே நடத்திக் கொள்ளவே, இப்போது அதிகம் பேர் விரும்புகிறார்கள்.
இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டிருக்கிறது, உணவு வினியோக நிறுவனமான ஸொமேட்டோ. வெள்ளோட்டமாக, டெல்லியில் பார்ட்டிகளுக்கான உணவை டெலிவரி செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறது, இந்நிறுவனம்.வழக்கமாக, இருசக்கர வாகனங்களில் உணவை டெலிவரி செய்வது போல, பார்ட்டிகளுக்கான உணவை டெலிவரி செய்ய முடியாது என்பதால், மூன்று சக்கர, நான்கு சக்கர வாகன சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு வைத்துள்ளது.
வாடிக்கையாளர்களும் தங்களுக்கு பிடித்தமான ஓட்டலில் ஆர்டர் செய்து, தங்கள் இடத்திலேயே பார்ட்டிகளை கொண்டாடிக் கொள்வதால், செலவு குறைந்துள்ளதாகவும், பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|