பதிவு செய்த நாள்
17 டிச2020
21:23
புதுடில்லி:சுவையான பிரியாணி வர்த்தகத்தில், ‘சூப்பர்’ லாபம் கிடைப்பதால், அத்துறையில் களமிறங்க, பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்த வகையில், ஜூபிலன்ட் புட்ஒர்க்ஸ் நிறுவனம், ‘ஏக்தம்’ என்ற ‘பிராண்டு’ பெயரில், மூன்று பிரியாணி உணவகங்களை, டில்லி அருகே உள்ள குருகிராமில் விரைவில் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த உணவகங்களில், 99 ரூபாய் முதல், 21 வகையான சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படும்.
‘கபாப், ஷவர்மா, பார்பிக்யூ, அல்–பஹாம்’ போன்ற சுவையான கோழிக்கறி உணவுகளும் கிடைக்கும் என, நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில், டில்லி உள்ளிட்ட தலைநகர் பிராந்தியத்தில், மேலும் பல ஏக்தம் பிரியாணி கடைகளை திறக்க, திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம், 281 நகரங்களில், ‘டோமினோ பீட்சா’ உணவகங்களையும், எட்டு நகரங்களில், 26 ‘டன்கின் டோநட்ஸ்’ சிற்றுண்டி மையங்களையும் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு, சீன உணவு வகைகளுக்கு என, ‘ஹாங்ஸ் கிச்சன்’ என்ற பிரத்தேக உணவகத்தை, இந்நிறுவனம் திறந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|