பதிவு செய்த நாள்
17 டிச2020
21:24
புதுடில்லி:கடந்த அக்டோரில், ‘ஸ்மார்ட்போன்’ விற்பனை, 42 சதவீதம் உயர்ந்து, 2.10 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தாண்டில், இரண்டாவது முறையாக ஒரே மாதத்தில் மிக அதிக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையாகியுள்ளது.
ஜன., – மார்ச் வரையிலான முதல் காலாண்டில், ஸ்மார்ட்போன் விற்பனை நன்கு இருந்தது. அதன் பின், கொரோனாவால் விற்பனை பாதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து, செப்.,ல், இதுவரை இல்லாத வகையில், 2.30 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாயின. இது, அக்.,ல், 2.10 கோடி என்ற அளவில் இருந்தது. வலைதளம் வாயிலான ஸ்மார்ட்போன் விற்பனை, 51 சதவீதமாக உயர்ந்துள்ளது.
7ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரையிலான ஸ்மார்ட்போன் விற்பனை, 60 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த விற்பனையில், இப்பிரிவின் பங்கு, 58 சதவீதமாக உயர்ந்து உள்ளது.‘பிரிமியம்’ பிரிவில், ஐபோன் எக்ஸ்ஆர், 11 மற்றும் ஒன்பிளஸ் 8 ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.
அக்., விற்பனையில் ஜியோமி நிறுவனம், 24.8 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தை பிடித்து உள்ளது. அடுத்த இடங்களில், சாம்சங், விவோ, ரியல்மி, ஒப்போ ஆகியவை உள்ளன. இந்தாண்டு, ஸ்மார்ட்போன் விற்பனை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவு, ஒற்றை இலக்கத்திற்குள் இருக்கும் என, ஐ.டி.சி., நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|