பதிவு செய்த நாள்
17 டிச2020
21:27
புதுடில்லி:கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், வேளாண் பொருட்கள் மற்றும் மருந்துகள் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, டில்லியில் ‘பி.எச்.டி.சி.சி.ஐ.,’ அமைப்பின் கூட்டத்தில், மத்திய வர்த்தகத் துறை செயலர், அனுப் வாதவன் பேசியதாவது:ஊரடங்கு காலத்தில், பெட்ரோலியம், பொறியியல், ரசாயனம், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் ஏற்றுமதி குறைந்துள்ளது. இருந்த போதிலும், வேளாண் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றின் ஏற்றுமதி சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. இதை தக்க வைக்க வேண்டும்.
நாடு, அனைத்து துறைகளிலும், கொரோனா தாக்கத்திற்கு முந்தைய நிலைக்கு திரும்பி வருவதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. தொழில் துறையில், நடுத்தர மற்றும் நீண்ட கால வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அதற்கேற்ப நாம், உற்பத்தி திறனை உயர்த்த வேண்டும். தற்போது உருவாகியுள்ள, குறுகிய கால வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|