பதிவு செய்த நாள்
18 டிச2020
22:32
புதுடில்லி:வேளாண் தொழில்நுட்ப, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை ஈர்க்கும் வகையில், தொழில்நுட்ப நிறுவனமான, ‘சிஸ்கோ’ மத்திய அரசுடன் இணைந்து, போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.பரிசுத் தொகை, 2 கோடி ரூபாய் என, சிஸ்கோ தெரிவித்து உள்ளது.
இதன் மூலம், புதுமை தீர்வுகளைக் கொண்ட, வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கண்டறிய முடியும் என்றும் தெரிவித்து உள்ளது.விவசாயிகளின் நஷ்டத்தை அதிகரிக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, சோதனைகளை மேற்கொள்வது, வருவாயை அதிகரிப்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, இந்த பரிசு உதவிகரமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஸ்கோ நிறுவனத்தின் இந்த, ‘வேளாண் சவால்’ முயற்சி, விவசாயத் துறையை தொழில் நுட்பமயமாக்க உதவும் என எதிர்பார்ப்பதாக, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|