அதிக வரவேற்பை காணும் பிராந்திய மொழி விளம்பரங்கள் அதிக வரவேற்பை காணும் பிராந்திய மொழி விளம்பரங்கள் ...  வாத்துகளை அடித்தால் பொன் முட்டை கிடைக்காது! வாத்துகளை அடித்தால் பொன் முட்டை கிடைக்காது! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வாராக் கடன் வங்கி: வருமா, வராதா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2020
21:14

புதுடில்லி:தலைக்கு மேல் கத்தியாக, வங்கிகளை, வாராக் கடன்கள் மிரட்டிக் கொண்டிருக்க, இவற்றை சமாளிக்கும் விதமாக, தனியாக, வாராக் கடன் வங்கி ஒன்றை அமைப்பது குறித்த பேச்சுகள், மீண்டும் எழத் துவங்கி உள்ளன.

மறுசீரமைப்பு

இந்நிலையில், தற்போது, வாராக் கடன் வங்கியை அமைப்பது உள்ளிட்ட அனைத்து விதமான வாய்ப்புகள் குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாக, பொருளாதார விவகார துறை செயலர் தருண் பஜாஜ் கூறியுள்ளார்.வங்கிகளின் வாராக் கடன் பிரச்னைக்கு ஒரே தீர்வாக, வாராக் கடன் வங்கி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்ரமணியன், வாரக் கடன் வங்கி அல்லது சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் ஒன்றை அமைப்பது அவ்வளவு சரியான தீர்வாக இருக்காது என தெரிவித்திருந்தார்.இதேபோல், கோட்டக் வங்கியின் நிர்வாக இயக்குனர் உதய் கோட்டக்கும், வாராக் கடன் மலைபோல் குவிந்திருக்கும் நிலையில், வாராக் கடன் வங்கியால் எந்த லாபமும் இருக்காது என கூறியிருந்தார்.

ஆனால், இவர்கள் இருவரது கருத்துக்கும் நேர்மாறாக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் டி.சுப்பாராவ், வாராக் கடன் வங்கியை அமைப்பது என்பது, தேவையானது மட்டுமல்ல; தவிர்க்க முடியாததும் ஆகும் என கூறியுள்ளார்.

அவசியம்

மேலும், வெற்றிகரமாக இயங்கும், மலேஷியாவில் உள்ள, ‘டானஹர்த்தா வங்கி’யையும் உதாரணம் காட்டினார்.அத்துடன், ‘வாராக் கடன் வங்கியில் ஊழல் இருக்காது; வட்டி குறித்த தனிப்பட்ட ஆர்வங்கள் இருக்காது. அத்துடன், தற்போதைய திவால் சட்ட கட்டமைப்புகள் போதாது. கூடுதல் சுமையை அவற்றால் சமாளிக்க முடியாது. எனவே, தனியாக வாராக் கடன் வங்கி அவசியம்’ என்றும் தெரிவித்திருந்தார்.


நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்தபட்சம், 5 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் எனும் பட்சத்தில், வாராக் கடன்கள் பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், மார்ச், 2021ல், வாராக் கடன், 12.5 சதவீதம் அதிகரிக்கும் என கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாராக் கடன் வங்கியை அமைப்பது குறித்து, இப்படி பல்வேறு தரப்பட்ட கருத்துக்கள் எழுவதால், அரசு இன்னும் தெளிவான முடிவுக்கு வரமுடியாமல் இருப்பதாக, உயரதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)