பதிவு செய்த நாள்
19 டிச2020
21:19
புதுடில்லி:உலகின் இரண்டாவது பணக்காரரான, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு, கடந்த வெள்ளியன்று மட்டும் கிட்டத்தட்ட, 66 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
மின்சார கார் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும், ‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார், எலான் மஸ்க். உலக பணக்காரர்கள் வரிசையில்,‘பேஸ்புக்’ நிறுவனர், மார்க் ஜுக்கர்பெர்க், முதல் இடத்திலும் எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக,‘புளூம்பெர்க் மில்லியனர்ஸ் இண்டெக்ஸ்’ மதிப்பிட்டுள்ளது.
மார்க்கின் சொத்து மதிப்பு, 13.86 லட்சம் கோடி ரூபாய். 49 வயாதாகும், எலான் மஸ்கின் தற்போதைய சொத்து மதிப்பு, 12.38 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டில் மட்டும், எலான் மஸ்க் சொத்து மதிப்பு, 10.34 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது.
டெஸ்லா நிறுவன பங்குகள் விலை நடப்பு ஆண்டில் மட்டும், 731 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுவும், இந்த மாதத்தில் மட்டும், 70 சதவீதம் அதிகரித்துள்ளது.டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கிட்டத்தட்ட, 44.40 லட்சம் கோடி ரூபாயாகும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|