பதிவு செய்த நாள்
22 டிச2020
22:12
புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை, சீனாவிலிருந்து, 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 120 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்கள், அரசின் அனுமதிக்காக வந்துள்ளன.
சீனாவிலிருந்து, இந்தியாவில் எந்த துறையில் முதலீடு செய்வதாக இருந்தாலும், அதற்கு அனுமதி வாங்கவேண்டியது கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது.கொரோனா தொற்றினால், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வெளிநாட்டு நிறுவனங்கள், அவற்றை கையகப்படுத்தி விடுவதை தடுப்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு சந்தர்ப்பவாத முதலீடுகளை தடுப்பதில் தீவிரமாக இருக்கிறது. சீனாவிலிருந்து, 120-- – 130 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்கள், அரசின் அனுமதிக்காக வரப்பெற்றுள்ளன. சில சீன நிறுவனங்கள், அரசு ஒப்பந்தத்தை பெறுவதற்காக, விண்னப்பித்திருக்கின்றன.
அவை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.சீன முதலீட்டு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்ய மிகுந்த ஆர்வமாக இருக்கின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|