பதிவு செய்த நாள்
24 டிச2020
16:24
புதுடில்லி: வோடபோன் வெற்றி பெற்றிருந்த ரூ.22,000 கோடி மூலதன ஆதாய வரி வழக்குக்கு எதிராக சிங்கப்பூர் கோர்ட்டில் இந்தியா மேல் முறையீடு செய்துள்ளது.
2007-ல் வோடபோன் நிறுவனம், ஹட்சிசன் எஸ்ஸார் நிறுவனத்தின் 67% பங்குகளை கையகப்படுத்தியது. இதற்கு மத்திய அரசு மூலதன ஆதாய வரி விதித்தது. இதனை எதிர்த்து வோடபோன் இந்திய உச்ச நீதிமன்றத்தை நாடியது. வோடபோனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து 2012-ல் மத்திய அரசு நிதிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது. இதனால் வோடபோன் நிறுவனம் ரூ.22,000 கோடியை இரண்டு தவனைகளாக செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தியாவின் சட்டத் திருத்தத்தை எதிர்த்து வோடபோன் நிறுவனம் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தை அணுகியது. 2016-ல் இருந்து நடந்து வந்த வழக்கில், கடந்த செப்., மாதம் தீர்ப்பு வெளியானது. இந்திய அரசின் முடிவு இந்தியா - நெதர்லாந்து இடையிலான முதலீட்டு ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றது. வரிகளை செலுத்த வேண்டிய தேவையில்லை என்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று கெய்ர்ன் எரிசக்தி நிறுவனத்துக்கு எதிரான மூலதன ஆதாய வரி வழக்கிலும் இந்தியா பின்னடைவை சந்தித்தது. அவர்களின் 10% பங்குகளை இந்தியா விற்பனை செய்ததை எதிர்த்து அவர்கள் சர்வதேச நடுவர் தீர்பாயத்தை நாடினர். அதனை விசார்த்தத தீர்ப்பாயம், இந்தியா வட்டியுடன் 10 ஆயிரத்து, 360 கோடி ரூபாயை கெய்ர்ன் நிறுவனத்துக்கு வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|