நன்றாக வாங்கி சாப்பிடுங்க ஸொமேட்டோ அதிகாரி கடிதம் நன்றாக வாங்கி சாப்பிடுங்க ஸொமேட்டோ அதிகாரி கடிதம் ...  சிக்கலில் மாட்டிக் கொண்டசீனாவின் ‘அலிபாபா’  குழுமம் சிக்கலில் மாட்டிக் கொண்டசீனாவின் ‘அலிபாபா’ குழுமம் ...
ரூ.22,000 கோடி வரி வழக்கு: வோடபோனுக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2020
16:24

புதுடில்லி: வோடபோன் வெற்றி பெற்றிருந்த ரூ.22,000 கோடி மூலதன ஆதாய வரி வழக்குக்கு எதிராக சிங்கப்பூர் கோர்ட்டில் இந்தியா மேல் முறையீடு செய்துள்ளது.


2007-ல் வோடபோன் நிறுவனம், ஹட்சிசன் எஸ்ஸார் நிறுவனத்தின் 67% பங்குகளை கையகப்படுத்தியது. இதற்கு மத்திய அரசு மூலதன ஆதாய வரி விதித்தது. இதனை எதிர்த்து வோடபோன் இந்திய உச்ச நீதிமன்றத்தை நாடியது. வோடபோனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து 2012-ல் மத்திய அரசு நிதிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது. இதனால் வோடபோன் நிறுவனம் ரூ.22,000 கோடியை இரண்டு தவனைகளாக செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தியாவின் சட்டத் திருத்தத்தை எதிர்த்து வோடபோன் நிறுவனம் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தை அணுகியது. 2016-ல் இருந்து நடந்து வந்த வழக்கில், கடந்த செப்., மாதம் தீர்ப்பு வெளியானது. இந்திய அரசின் முடிவு இந்தியா - நெதர்லாந்து இடையிலான முதலீட்டு ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றது. வரிகளை செலுத்த வேண்டிய தேவையில்லை என்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று கெய்ர்ன் எரிசக்தி நிறுவனத்துக்கு எதிரான மூலதன ஆதாய வரி வழக்கிலும் இந்தியா பின்னடைவை சந்தித்தது. அவர்களின் 10% பங்குகளை இந்தியா விற்பனை செய்ததை எதிர்த்து அவர்கள் சர்வதேச நடுவர் தீர்பாயத்தை நாடினர். அதனை விசார்த்தத தீர்ப்பாயம், இந்தியா வட்டியுடன் 10 ஆயிரத்து, 360 கோடி ரூபாயை கெய்ர்ன் நிறுவனத்துக்கு வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)