பதிவு செய்த நாள்
25 டிச2020
21:29
புதுடில்லி:ரிலையன்ஸ்
இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஐ.எம்.ஜி., ரிலையன்ஸ் நிறுவனத்தின் வசம்
இருக்கும், ஐ.எம்.ஜி., வொர்ல்டுவைடு நிறுவனத்தின், 50 சதவீத
பங்குகளை வாங்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
சர்வதேச விளையாட்டுகளை சந்தைப்படுத்துதல், நிர்வகித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது, ஐ.எம்.ஜி., வொர்ல்டுவைடு நிறுவனம். இந்நிறுவனத்துடன் ரிலையன்ஸ் இணைந்து, ‘ஐ.எம்.ஜி., – ஆர்’ என, சுருக்கமாக அழைக்கப்படும், ‘ஐ.எம்.ஜி., ரிலையன்ஸ்’ எனும்
கூட்டுத் தொழிலை துவக்கியது.தற்போது
இந்த கூட்டு நிறுவனத்தில், ஐ.எம்.ஜி.,
வொர்ல்டுவைடு வசம் இருக்கும்,
50 சதவீத பங்குகளை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 52.08 கோடி ரூபாய்க்கு
வாங்கிக் கொள்கிறது.
பரிவர்த்தனைகள் முடிந்த பின், ரிலையன்ஸ்
இண்டஸ்ட்ரீஸ், இந்நிறுவனத்தை ரீபிராண்டு செய்வது என, முடிவு
செய்திருக்கிறது. ஐ.எம்.ஜி., ரிலையன்ஸ் நிறுவனத்தின்
விற்றுமுதல், கடந்த நிதியாண்டில், 181.70 கோடி ரூபாய் ஆகும். நிகர
லாபம், 16.35 கோடி ரூபாயாகும்.
இந்த கையகப்படுத்துதலுக்கு, அரசு
அல்லது வேறு எந்த கட்டுப்பாட்டு அமைப்புகளின்
அனுமதியும் பெறத்
தேவை இல்லை என்பதால், இந்த மாதத்துக்குள்ளாகவே ஒப்பந்தம்
நிறைவேற்றப்பட்டுவிடும் என, ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|