பதிவு செய்த நாள்
26 டிச2020
21:32
புதுடில்லி:உலகளவில், ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக, இந்தியா, 2025ம் ஆண்டில்
உருவெடுக்கும் என்றும், 2030ம் ஆண்டில், மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்றும்
ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த, பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையமான, சி.இ.பி.ஆர்., அதன் ஆண்டு அறிக்கையை நேற்று வெளியிட்டது.
அதில் கூறப்பட்டுள்ள தாவது:கடந்த, 2019ம் ஆண்டில், இந்தியா, பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக முன்னேறியது. ஆனால், 2020ல், ஆறாவது இடத்துக்கு வந்துவிட்டது.
7 சதவீதம்
இந்தியா பின்தங்கியதற்கு, கொரோனா பாதிப்புகளும் ஒரு முக்கிய காரணமாகும். மேலும், இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததும் ஒரு காரணமாக அமைந்தது.அடுத்த ஆண்டில், இந்தியா,
9 சதவீதம் அளவுக்கும், 2022ம் ஆண்டில், 7 சதவீதம் அளவுக்கும் வளர்ச்சி பெறும்.இந்த
வளர்ச்சிப் பாதையில், 2030ம் ஆண்டில், இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய
பொருளாதாரமாக மாறும். 2025ல் இங்கிலாந்தையும், 2027ல் ஜெர்மனியையும், 2030ல்
ஜப்பானையும் முந்தும்.
பொதுவாக, ஒரு நாடு பொருளாதாரத்தில் அதிகம் முன்னேறிய நிலையில், அதன் வளர்ச்சி விகிதம் குறைவது இயற்கையே. இதன்படி, 2035ம் ஆண்டில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம், 5.8 சதவீதமாக இருக்கும்.டாலர் அடிப்படையில், 2030ம் ஆண்டின் முற்பகுதி வரை,
இந்தியாவை முந்தி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக ஜப்பான் திகழும்.
அத்துடன், ஜெர்மனியை நான்காம் இடத்திலிருந்து, ஐந்தாவது இடத்திற்கு தள்ளும்.
கொரோனா பாதிப்புகள் காரணமாக, இந்தியாவின் பொருளாதாரம் அதன் வளர்ச்சி வேகத்தை தற்போது இழந்துள்ளது.கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 23.9 சதவீதமாக சரிந்தது.இது, அந் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட கால் பகுதியை அழித்து விட்டது என்பதையே உணர்த்துகிறது.
உலகளவில் தேவைகள் சரிந்தது, கடுமையான ஊரடங்கு உத்தரவுகளினால், உள்நாட்டு தேவைகளும் பாதித்தது ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.
கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டதால், பொருளாதாரத்தின் பல பகுதிகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வர முடிந்தது. இருப்பினும், நிலைமை இன்னும் தொற்று நோய் பாதிப்புக்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே தான் உள்ளது.
அறுவடை
இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கு முக்கிய காரணமாக, விவசாயத் துறை அமைந்துள்ளது. அறுவடை சிறப்பாக அமைந்தது.சர்ச்சைகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட, உயர்
பணமதிப்பு நீக்கம் மற்றும் தற்போதைய விவசாயத் துறை சீர்திருத்த நடவடிக்கைகள்
ஆகியவை நடுத்தர மற்றும் நீண்டகாலத்தில் பொருளாதார நன்மை பயப்பதாகவே இருக்கும்.இந்தியாவில் தடையாக இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளில் அரசு அதிக முதலீடு
செய்வதை பொறுத்து, பொருளாதார வளர்ச்சி மேலும் வேகம் பெறும்.இவ்வாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலிடத்தில் சீனா
பொருளாதார வளர்ச்சியில், சீனா, 2028ல், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி, உலகின் முதல் மிகப் பெரிய பொருளாதார நாடாக உயரும். கொரோனாவால் சீனாவை விட, அமெரிக்கா
அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால், இதற்கு முன் கணித்திருந்ததை விட, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே, முதல் இடத்தை சீனா பிடித்துவிடும் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|